பஞ்சமார் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :3739 days ago
அவலூர்பேட்டை : வளத்தியில் பஞ்சமார் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தியில் உள்ள பஞ்சமார் அம்மன் கோவிலில் ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. இதில் கிராம மக்கள் திர ளாக சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.