உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பாலசமுத்திரத்தில் பிரம்மோற்சவ விழா!

பழநி பாலசமுத்திரத்தில் பிரம்மோற்சவ விழா!

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில், ஆவணிபிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி செப்.,2 வரை நடக்கிறது.

பெருமாள் தினமும் காலை 7 மணிக்கு மேல் சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 7 மணிக்குமேல் அனுமான், கருடர் போன்ற வாகனங்களில் திருவுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்.,1ல் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட விழா நடைபெறவுள்ளது.

விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.50 மணிக்கு அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !