உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறப்பு!

விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறப்பு!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில் 9 லட்சத்து 61 ஆயிரத்து 779 ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கொளஞ்சி, ஆய்வாளர் சுபத்ரா முன்னிலையில் 9 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சுந்தர ராஜேஷ் மற்றும் ஊழியர்கள், அபிராமி ஐ.டி.ஐ., மாணவர்கள், கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 9 லட்சத்து 61 ஆயிரத்து 779 ரூபாய் ரொக்கம், 15.100 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. கடந்த ஜூன் மாத திறப்பின்போது, 11 லட்சத்து 43 ஆயிரத்து 863 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !