உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா துவக்கம்

பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா துவக்கம்

கீழக்கரை : பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 114ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஜமாத் தலைவர் சீனி அப்துல் லத்தீப் கொடியேற்றம் செய்தார். செப்., 30 இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. அக்.,9 கொடியிறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெறும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் செய்யது இபுராம்சா, துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, ஜலால் மீரா ஹமாம், முஜிபுர் ரகுமான், பொருளாளர் ஹபிபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், ஒன்றியக்கவுன்சிலர் ஹபிபுல்லா, சதக், ரம்லான், பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !