உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக ஆஞ்சநேயருக்கு நாராயணன் அலங்காரம்!

யோக ஆஞ்சநேயருக்கு நாராயணன் அலங்காரம்!

விழுப்புரம்: புரட்டாசி சனிக்கிழமை யொட்டி விழுப்புரம் யோக ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில், ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி இந்த  கோவிலில் உள்ள யோக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஆஞ்நேயருக்கு லட்சுமி  நாராயணன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை  ஆலய நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !