வெண்கல தேர்
ADDED :5202 days ago
தமிழகத்தில் பெரும்பாலும் கல்லால் ஆன தேர்களும் தங்கத்தேர்களும் உள்ளன. ஆனால் இந்தியாவிலேயே மிக உயரமான வெண்கலத்தால் ஆன கிண்ணித் தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது. இதன் உயரம் 24 அடி. 11 அடி அகலம் உடையது. வைகாசி மாதம் பிரம்மோற்ஸவ விழாவின் போது அம்பாள் இந்த தேரில் வலம் வருவதுண்டு. மேலும் இக்கோயிலில் மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாளும் இருக்கிறது.