சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி ஊஞ்சல் சேவை!
ADDED :3668 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ராதா, ருக்மணி கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் யாதவ சமூகத்தினர் செய்தனர்.