உடுமலை முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை
உடுமலை: கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், இன்று சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதியில், கிருத்திகையை முன்னிட்டு, இன்று மாலை, 5:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு அனைத்துவித அபிேஷகம் செய்யப்படுகிறது. வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனையுடன், உற்சவ மூர்த்தி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தளி ரோடு, போடிபட்டி, பாலதண்டாயுதபாணி கோவிலில், சுவாமிக்கு காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜை நடக்கிறது. பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில், இன்று காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், கோவில் வளாகத்தில், இன்று மாலை, 6:30 மணிக்கு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. உடுமலையை சேர்ந்த ஜவஹர் சுதன் பக்தி மெல்லிசை குழுவினரின் பாடுகின்றனர். மடத்துக்குளம், பாப்பான் குளத்தில் உள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், இன்று காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், மாலை, 6:00 மணிக்கு, உற்சவருக்கு அபிேஷக ஆராதனையும் நடக்கிறது; சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.