உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா!

மயிலம் முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா!

மயிலம்: மயிலம் முருகன் கோவி லில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம், ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர், மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலம் அக்கினி குளம் அருகே ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து, அங்கப்பிரதட்சணம் செய்தனர். அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !