உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணுவிற்கு அவதாரம் இருப்பது போல, சிவனுக்கும் உண்டா?

விஷ்ணுவிற்கு அவதாரம் இருப்பது போல, சிவனுக்கும் உண்டா?

ஞான சம்பந்தர் சிவனை பிறப்பிலி என்று போற்றுகிறார். அதாவது கர்ப்பவாசம் செய்து பிறப்பு எடுக்காதவர் என்பது பொருள். சரபர், பைரவர், தட்சிணாமூர்த்தி போன்ற வடிவங்களில் தாமே அருள்பாலித்தாரே தவிர, அவதாரம் அல்லது கர்ப்ப வாசப்பிறப்பு எடுக்கவில்லை. சைவத்தில் அவதாரம் என்ற சொல்லைக் கையாள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி தெப்பத் திருவிழா துவக்கம் மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பெற்ற கோயில் இது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புடையது. இக்கோயிலில் நேற்று (பிப் 20ல்) மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.