மரப்பாலம் மாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி
ADDED :3684 days ago
கூடலுார்: கூடலுார், மரப்பாலம் வேளாங்கன்னி மாதா ஆலய திறப்பு விழா சிறப்பாக நடந்தது. கூடலுார், மரப்பாலம் புளியாம்பாறை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள, வேளாங்கன்னி மாதா ஆலய திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அருட்தந்தை ஜான்சன் தலைமை வகித்தார். ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் பங்கேற்று கூட்டு திருப்பலி நடத்தி, ஆலயத்தை திறந்து வைத்தார். பங்கு மக்கள் பங்கேற்றனர்.