பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97வது ஜெயந்தி விழா
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 97ம் ஆண்டு ஜெயந்தி விழா வரும் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30 தேதி, டிச., 1ம் தேதியும், ஆஸ்ரம வளாகத்தில் நடக்கிறது. 30ம் தேதி காலை 6:30 மணிக்கு பிரதான் மந்திரில் ஹோமம், 10:30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் பஜனை, 6:15 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி குழுவினரின் வீணை இன்னிசை நடக்கிறது. டிச., 1ம் தேதி காலை 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கிறது. 11:00 மணிக்கு விழா அரங்கில் சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், மாலை 4:30 மணிக்கு ஸ்ரீமதி பார்வதி பௌல் அவர்களின் பக்திபாடல்கள் மற்றும் நடனம். 6:15 மணிக்கு ஸ்ரீமதி அனுராதா ஸ்ரீராம் குழுவினரின் இன்னிசை, இரவு 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா மற்றும் ஆரத்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆசிரமத்தலைவர் ஜஸ்டிஸ் அரு ணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.