இளையான்குடியில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :3616 days ago
இளையான்குடி: இளையான்குடியில் மழை தாமதமானதை அடுத்து, பயிர்களுக்கு களையெடுப்பு, உரம் போட முடியாமல் விவசாயிகள் உள்ளனர். தாயமங்கலம் கிராம மக்கள் நேற்று மாலை மழை வேண்டி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்தனர். இதே போல் கிராமத்தில் உள்ள அய்யனார், முனீஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.