பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா உற்சவ விழா!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், மகா உற்சவ விழா நடந்து வருகிறது. பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், மகா உற்சவ விழா, கடந்த, 17ம் தேதி, காலை, 8:35க்கு, கோமாதா பூஜை, மதியம், 1:20க்கு, பூர்ணாஹூதி, திருவாராதனம், மாலை, 6:00 மணிக்கு, லட்சுமி நரசிம்மர் ேஹாமம், இரவு, 9:00 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கின்றன. நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு, சந்தான கிருஷ்ண ேஹாமம், மதியம், 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, பிற்பகல், 3:00 மணிக்கு, வேத, திவ்ய ப்ரபந்த பாராயணம், மாலை, 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தன. நேற்று காலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், திருப்பாவை, கோமாதா பூஜை, 8:00 மணிக்கு, லட்சுமி நரசிம்மர் ேஹாமங்கள், பகல், 11:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, மதியம், 12:00 மணிக்கு, கும்ப மகா சம்பரோக்ஷணம், நண்பகல், 1:00 மணிக்கு, சாற்றுமுறை, மாலை, 4:00 மணிக்கு புஷ்ப யாக நிகழ்ச்சிகள் நடந்தன; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.