கொட்டும் மழையில் கும்பாபிஷேகம்
ADDED :3656 days ago
வடமதுரை: வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பழமை வாய்ந்த சக்திவிநாயகர், சுப்பிரமணியசுவாமி கோயில் இருந்தது. திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டபோது இக்கோயில் அகற்றப்பட்டது. இதனையடுத்து அதே பகுதியில் புதிதாக ÷ காயில்களை கட்டி நேற்று கும்பாபிஷேகம் நடத்தினர். நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. பக்தஆஞ்சநேயர் ÷ காயில் அர்ச்சகர் நாராயணன் அய்யங்கார் கொட்டும் மழையுடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் ராஜசேகர், பண்ணாரிஅம்மன் ஸ்பின்னிங் மில் பொதுமேலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் திரவியராஜ், கூட்டுறவு சங்க தலைவர் குப்பாச்சி பங்கேற்றனர்.