புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 90வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடந்தது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் உள்ள ஹில்வியூ ஸ்டேடியத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படம் தங்கரதத்தில் வைத்து கொண்டு வரப்பட்டது. அப்போது, ெஹலிகாப்டரில் இருந்து மலர் துாவப்பட்டது. சிறப்பு வழிபாடு, குழந்தைகளின் இசைநிகழ்ச்சிகள் நடந்தன.மாலையில், 16 நாடுகளைச் சேர்ந்த 90 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற சாய் - சிம்பொனி இசை நிகழ்வு நடந்தது. பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆந்திரா கவர்னர் நரசிம்மன், விழா சிறப்பு மலரை வெளியிட்டார். சத்ய சாய் சேவா நிறுவனங்களின் அகில இந்திய தலைவர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.