உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவிலில் தீப திருவிழா

மயிலம் கோவிலில் தீப திருவிழா

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12 :00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு நறுமண பொருட்களினால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர். மாலை 6:00 மணிக்கு சங்குகண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றினர். மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கினர். இரவு 7:00 மணிக்கு தேரடி வீதியில் சொக்கபானை என்னும் பெரும் தீயை கொளுத்தினர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !