உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டயபுரம் கோயிலில் குருபிரதோஷ விழா

எட்டயபுரம் கோயிலில் குருபிரதோஷ விழா

எட்டயபுரம் : எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர் நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் குருபிரதோஷ விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.எட்டயபுரம் எட்டீஸ்வரர் மூர்த்தி கோயிலில் மாலை மகா கணபதி பூஜையுடன் குருபிரதோஷ விழா துவங்கியது. உலகநலன் வேண்டி மகா சங்கல்பம் நடந்தது. புண்ணியா வாஜனம், கலச ஆவாகனம், பஞ்சசுத்த ஜெபம், பாராயணம், ருத்திர சுத்த ஹோமம், திரவியகுதி, பூர்ணாகுதி நடந்தது. அதிகார நந்தி பகவானுக்கும், எட்டீஸ்வர மூர்த்திக்கும், பெரிய நந்தி பகவானுக்கும் 21 வகையான அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றி, வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோம சூத்ர பிரதட்சண வழிபாடு செய்தனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு பன்னீர் அபிஷேகம் நடந்தது. அன்று திருவாதிரை நட்சத்திரமானதால் நடராஜர் சுவாமிக்கு சோட்டாச்ச உபசார நாட்டிய தீபாராதனை நடந்தது. காண்டாமணியோசை, சங்குநாதம் முழங்க சுவாமி நந்தீஸ்வரருக்கு ஏககால சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரசுராம சுப்பிரமணியன் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானத்தார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !