உச்சிமகாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3583 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகேவுள்ள தெ.மேட்டுப்பட்டி உச்சிமகாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.யாகசாலை பூஜைகள் இரு நாட்களாக நடந்தன. நேற்று காலை 9.47 மணிக்கு பிரகாஷ் சிவாச்சார்யார் தலைமையில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புதியதாக பிரதிஷ்டையான சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது.யூனியன் தலைவர்கள் கீதா, அன்னக்களஞ்சியம், ஊராட்சி தலைவர் மாரிமுத்து, சர்க்கரை ஆலை தலைவர் ராம்குமார் பங்கேற்றனர்.