விழுப்புரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா!
ADDED :3715 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழுப்புரம் பிரஹன் நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் சுவாமிக்கு, சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மாள் சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பகல் 12:30 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. உற்சவர் நடராஜர் நடன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.