உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தங்கரதம் சாதனை: மூன்றே நாட்களில் 367 பேர் இழுத்தனர்!

பழநி தங்கரதம் சாதனை: மூன்றே நாட்களில் 367 பேர் இழுத்தனர்!

பழநி,: பழநி மலைக்கோயிலில் மூன்றே நாட்களில் 367பேர் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்குமேல் தங்கரதப் புறப்பாடு நடக்கிறது. ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்தும் பக்தர்கள் தங்கரதம் இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் 5பேர் சிறப்பு தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.ஒரு நாளைக்கு எத்தனைபேர் பணம் கட்டினாலும் ஒரே ஒருமுறை மட்டுமே தங்கரதம் வெளிப்பிரகாரத்தை வலம்வரும். சராசரியாக சாதாரண நாட்களில் 30 முதல் 50 பேர் வரை தங்கரதம் இழுக்கின்றனர்.தொடர் விடுமுறை நாட்களான டிச.,25ல் 157பேர், 26ல் 114, 27ல் 96 பேர் என மொத்தம் 367பேர் தங்கரதம் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர். தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை காரணமாக விடுமுறை தினங்கள் சனி, ஞாயிறுகளில் குவிந்து விடுகின்றனர். அவர்கள் ’வின்ச்’, ’ரோப்கார்’ ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். பொதுதரிசன வழியில் 2 முதல் அதிகபட்சமாக 4 மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !