வாலாஜாபாத் சுப்பிரமணியர் கோவிலில் சகஸ்ர நாம பூஜை
ADDED :3712 days ago
வாலாஜாபாத்: நாயக்கன்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டாம் ஆண்டு, சகஸ்ர நாம பெரு விழா நேற்று, கோலாகலமாக நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டில், சகஸ்ர நாம பூஜை நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு, சகஸ்ர நாம பூஜையை ஒட்டி, நேற்று காலை 6:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகமும், காலை 8:00 மணி அளவில், முதல் கால பூஜையும், 10:00 மணி அளவில், இரண்டாம் கால பூஜையும், 11:30 மணி அளவில், மூன்றாம் கால பூஜையும், பகல் 2:00 மணி அளவில், நான்காம் கால பூஜையும் நடந்தன.நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமவாசிகள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.