புதுப்பாளையம் கோவிலில் ஆடி பெருவிழா
ADDED :5215 days ago
கடலூர்:கடலூர் புதுப்பாளையம் படவட்டம்மன் கோவிலில் நாளை (12ம் தேதி) ஆடி பெருவிழா நடக்கிறது.இதனையொட்டி காலை 6 மணிக்கு கரகம் எடுத்து வருதல், 8 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 1 மணிக்கு அன்னதானம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை படவட்டம்மன் ஆலய வழிபடுவோர் நல சங்கத்தினர் செய்து வருகின்றனர்.