திருவுளச்சீட்டை குழந்தைகள் எடுக்கச் சொல்லி பார்ப்பது பலனளிக்குமா?
ADDED :3701 days ago
தெய்வத்தின் திருவுள்ளம் என்ன என்பதை இயல்பாக அறிந்து கொண்டு நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளும் ஒரு விஷயம் தான் திருவுளச்சீட்டு. நாமே எழுதிப் போட்டு எடுத்தால் நமக்கு சாதகமான சீட்டை எடுத்து விட வாய்ப்பு இருப்பதால் அதன் இயல்பு போய் விடும். அதற்காகத் தான் தெய்வத்துக்கு சமமான குழந்தைகளைக் கொண்டு எடுக்க வேண்டும் என்கிறார்கள்.