உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் நடந்தன.

இக்கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிசேக பூஜை நடந்தது. பின், ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கு வைத்து கால பைரவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !