உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆக்கிரமிப்பில் மீனாட்சியும் தப்பவில்லை: கோவில் நிர்வாகம் புகார்

ஆக்கிரமிப்பில் மீனாட்சியும் தப்பவில்லை: கோவில் நிர்வாகம் புகார்

மதுரை : மதுரை ஆக்கிரமிப்பு படலத்தின் உச்சமாக, மீனாட்சி அம்மன் கோவிலிலும் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்துள்ளனர். ஆக்கிரமிப்புக்கு பெயர் பெற்ற நகரம், மதுரை என்பதை, குவியும் புகார்கள் நிரூபிக்கின்றன. உச்சமாக, மீனாட்சி அம்மன் கோவிலையும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவைக்கவில்லை. இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியதாவது: கோவிலின் நான்கு கோபுர வாசலில், பூஜைப்பொருள் விற்கும் உரிமம், கோவில் நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது. வடக்கு கோபுர வாசல் எதிரே, மாநகராட்சி அனுமதி பெற்ற இரு கடையில்(எண்.235,466), அனுமதியில்லாமல் பூஜை பொருட்கள் விற்கின்றனர். சிகரெட், போதை வஸ்துகள் விற்பதால், கோவிலின் புனிதம் பாதிக்கிறது. கோவில் மூலம் பூஜை பொருள் விற்கும் உரிமம் பெற்றவர்கள், நஷ்டம் அடைகின்றனர். இதை காரணம் காட்டி, பிற கடையின் ஏலம் புறக்கணிக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ளதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ல் கொடுத்த புகார் மீது, இதுவரை நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !