அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3687 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் பழனிஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
கோயிலில் நேற்று முன் தினம் யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் இக்கோயிலில் சிவன், அய்யா, மகாளியம்மன், ஆயிரங்கண் மாரியம்மன், சஞ்சீவி விநாயகர் , விநாயகர் கோயில் ஆகிய கோயில்கள் வருஷாபிஷேகமும் நடந்தது. சிறப்பு ஆராதனைகள் நடந்தது.