உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமியருக்கு பாத பூஜை: கிராமத்தில் வழிபாடு

சிறுமியருக்கு பாத பூஜை: கிராமத்தில் வழிபாடு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, அரியாகவுண்டம்பட்டியில், சிறுமியருக்கு பாத
பூஜை, பம்பை அடித்து கன்னிமார் பூஜை நடந்தது. நாமக்கல் மாவட்டம், தர்மரட்ஷன சமிதி
சார்பில், சமயபுரம் மாரியம்மன் உற்சவர் சிலை அரியாகவுண்டம்பட்டிக்கு கொண்டு
வரப்பட்டுள்ளது. ஊர் நன்மை, மழை, தொழில் வளர்ச்சி வேண்டி, மாரியம்மன் கோவிலில்
சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதில், 12ம்
நாளான நேற்று, 108 பால் குட அபி?ஷகத்துடன் அம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, அரியாகவுண்டம்பட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது, 10 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கு, கன்னிமார் பூஜை செய்யப்பட்டது. அதில், 15க்கும் மேற்பட்ட சிறுமியரை நிற்க வைத்து, அவர்களுக்கு பாதபூஜை செய்து, கற்பூரம் ஆராத்தி காட்டி அனைவரும் வழிபட்டனர். பின் பம்பை அடித்து சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !