உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடக்கும், மாசி மாத பிரம்மோற்சவத்தில்,
பிப்.,20 இரவு முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 13ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. காலை, இரவு வேளைகளில், உற்சவர்
முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், எட்டாம் நாளான இன்று, யாளி வாகனத்திலும், நள்ளிரவில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கின்றன. வரும், 22ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !