திருமகூடலு திரிவேணி சங்கமம் கும்பமேளா விழா பிப்.,20 துவக்கம்
மைசூரு: மைசூரு மாவட்டம் திருமகூடலுவில், பிப்.,20 முதல், 22ம் தேதி வரை, 10வது கும்ப
மேளா விழா நடக்கவுள்ளது.வட மாநிலத்தில் வாரணாசியில் நடக்கும் கங்கா பூஜை போல்,
பிப்.,21 இரவு, 7:30 மணிக்கு திருமகூடலுவில் நடக்கும் கும்ப மேளாவில், கங்கா பூஜையுடன்
தீபாராதனை நடப்பது, கும்ப மேளாவின் சிறப்பு அம்சமாகும். இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கும், கலாசார நிகழ்ச்சி, ஆன்மிக நிகழ்ச்சிகளை, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் சீனிவாஸ் பிரசாத், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
பிப்.,21 காலை, புண்யாஹவச்சனம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், காலை, 11:00 முதல், மாலை, 4:00 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. நிகழ்ச்சிகளை முன்னாள் முதல்வர் குமாரசாமி துவக்கி வைக்கிறார். பின், கஞ்சா நரசிம்ம சுவாமி கோவிலிலிருந்து டி.நரசிபுரா மெயின் சாலைகளில், சுவாமி ஊர்வலம், மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீருத்ர ஹோமம், பூர்ணாஹூதி, இரவு, 7:00 மணிக்கு, வாரணாசி கங்கா பூஜை போல் தீபாராதனை நடக்கிறது.
பிப்.,21 மறுநாள் காலையில், சண்டி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. ஏழு புனித
நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள், திரிவேணி சங்கமத்தில் கலக்கப்படுகிறது. பின், புனித நீராடல் நடக்கும். முதல்வர் சித்தராமையா பங்கேற்கிறார்.