செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்!
திருவாரூர்: குடவாசல் அருகே,செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மஹாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம்,குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்.இக்கோவிலில், 18ம் ஆண்டாக, ஸ்ரீஆனந்தவல்லி ஸ்ரீமகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்,கடந்த 25ம் தேதி மாலை 3:00 மணியளவில், முதல்கால யாக பூஜைடன் துவங்கியது. அன்று மாலை 7:00 மணிக்கு திரிசதி லட்சார்ச்சனை பூர்த்தி விழா,இரவு 10:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி நடைபெற்றது. இரண்டாம் கால பூஜையாக,காலை 6:00 மணிக்கு ஸ்ரீ பஞ்சதசாஸரி ேஹாமம்;8:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி,கடம் புறப்பாடு, ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள்,ஸ்ரீமகாமேருவுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு திதி நித்யா பூஜை,சுவாசினி பூஜை; இரவு 7:00 மணிக்கு கஜபூஜை, கோபூஜை, அஸ்வபூஜை,சுவாமி வீதி உலா நடைபெற்றது. மகோற்சவ பூஜைகளை வித்யா உபாசகர் ஹரிஹரசிவம் தலைமையில்உபாசகர்கள், சிவாச்சாரியார்கள், வேதவிற்பன்னர்கள் என,20பேர் நடத்தினர். ஏற்பாடுகளை ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.இன்று காலை திருகல்யாண உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவு அடைகிறது.