உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்!

செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்!

திருவாரூர்: குடவாசல் அருகே,செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மஹாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம்,குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்.இக்கோவிலில், 18ம் ஆண்டாக, ஸ்ரீஆனந்தவல்லி ஸ்ரீமகாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம்,கடந்த 25ம் தேதி மாலை 3:00 மணியளவில், முதல்கால யாக பூஜைடன் துவங்கியது. அன்று மாலை 7:00 மணிக்கு திரிசதி லட்சார்ச்சனை பூர்த்தி விழா,இரவு 10:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி நடைபெற்றது. இரண்டாம் கால பூஜையாக,காலை 6:00 மணிக்கு ஸ்ரீ பஞ்சதசாஸரி ேஹாமம்;8:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி,கடம் புறப்பாடு, ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள்,ஸ்ரீமகாமேருவுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு திதி நித்யா பூஜை,சுவாசினி பூஜை; இரவு 7:00 மணிக்கு கஜபூஜை, கோபூஜை, அஸ்வபூஜை,சுவாமி வீதி உலா நடைபெற்றது. மகோற்சவ பூஜைகளை வித்யா உபாசகர் ஹரிஹரசிவம் தலைமையில்உபாசகர்கள், சிவாச்சாரியார்கள், வேதவிற்பன்னர்கள் என,20பேர் நடத்தினர். ஏற்பாடுகளை ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.இன்று காலை திருகல்யாண உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவு அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !