உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா!

காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா!

காரைக்கால்: காரைக்காலில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்தனர். காரைக்கால் பாலசந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில், 23ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா, அம்மையார் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 7.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மயிலாடுதுறை ஞானகுரு பாகவதர் கோஷ்டியார் உஞ்ச விருத்தி, பஜனை நடந்தது. காலை 9.30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி துவங்கியது. ௧0.௦௦ மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில், நாட்டக்குறிஞ்சி ராமலிங்கம், லிங்கம், ரங்கராஜன், இசை ஆசிரியர் சாய்கிருஷ்ணன், சுந்தர், தனலட்சுமி, காயத்ரி சுப்ரமணியன், மீனாட்சி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். மதியம் 12.௦௦ மணிக்கு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் நடராஜன், பாலசங்கீத வித்யாலயா டிரஸ்ட் பொறுப்பாளர்கள் சண்முகநாதன், முத்தரசி, அசோக்குமார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !