உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தாபுரம் கோவில் திருவிழா

கோவிந்தாபுரம் கோவில் திருவிழா

பொள்ளாச்சி: சித்துார் தாலுகாவுக்குட்பட்ட கோவிந்தாபுரம் குண்டத்து பத்ரகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண மகோற்சவ திருவிழா நாளை துவங்கி, 4ம் தேதி வரை நடக்கிறது. நாளை காலை, 5:00 மணிக்கு சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், இரவு, 7:00 மணிக்கு கம்பம் வெட்டுதல், இரவு 9:00 மணிக்கு கும்பம் நிறைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 2ம் தேதி காலை, 5:00 மணிக்கு சக்தி பூவோடு எடுத்தல், மாலை, 4:00 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 9:00 மணிக்கு குண்டம் வளர்த்தல், இடம் பெறுகின்றன. 3ம் தேதி காலை, 5:00 மணிக்கு சக்தி கும்பம் நிறைத்தல், காலை, 6:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதலும், 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு மஞ்சள் நீராடல், காலை, 10:00 மணிக்கு அபிேஷக பூஜை, காலை, 11:00 மணிக்கு அன்னதானமும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !