செல்லாண்டியம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை
ADDED :3508 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, செல்லாண்டியம்மன் கோவிலில் அம்மனுக்கு, 108 சங்கு பூஜை நடந்தது. சத்தியமங்கலம் கோபி சாலையில் உள்ளது அரியப்பம்பாளையம். இங்குள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் கடந்த பிப்., 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 24 நாட்கள் நடந்த மண்டல பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, 108 சங்குகள் வைத்து யாகசாலையில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம், மஹா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.