பிரகலாதனின் வாழ்க்கை உலகிற்கு வழங்கிய செய்தி எது?
ADDED :3631 days ago
பாலைவனத்தில் சந்தனமரம் தோன்றியதுபோல், அசுரர் கூட்டத்தில் பிரகலாதன் தோன்றினான். இறைத்தத்துவம் அண்ட சராசரத்திலுள்ள ஒவ்வோர் அணுவிலும் நிறைந்திருக்கிறது. இறைவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதை பிரகலாதனின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. வைணவ பக்தர்களில் முதலாமவர் என்று வைணவம் பிரகலாதனைக் குறிப்பிடுகிறது.