உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி காளஹஸ்தியில் பல்லக்கு சேவை

திருப்பதி காளஹஸ்தியில் பல்லக்கு சேவை

திருப்பதி: காளஹஸ்தியில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 11ம் நாளான நேற்று இரவு, பல்லக்கு சேவை நடந்தது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம், மார்ச் 2 முதல் நடந்து வருகிறது. 11ம் நாளான நேற்று காலை, சோமஸ்கந்தமூர்த்தி, ஞானபிரசுனாம்பிகைக்கு பால், தயிர், மஞ்சள், சந்தன அபிஷேகம் நடந்தது. பின், பல்லக்கு உற்சவம் நடந்தது. தங்க பல்லக்கில் சோமஸ்கந்தமூர்த்தி, ஞானபிரசுனாம்பிகையும் மாடவீதிகளில் வலம் வந்தனர். பிரம்மோற்சவம், இன்றுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !