உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்தாங்கால் கோவிலில் 23ம் தேதி பங்குனி உத்திரம்

ஊத்தாங்கால் கோவிலில் 23ம் தேதி பங்குனி உத்திரம்

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஊத்தாங் கால் முனீஸ்வரன் கோவிலில், வரும் 23ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி,  கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும், காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா  நடக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, வரும் 23ம் தேதி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணியளவில்  பால்குடம் ஊர்வலம், செடல் உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !