உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகூர் தர்கா கந்தூரி விழா:ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்பு

நாகூர் தர்கா கந்தூரி விழா:ஏராளமான யாத்ரீகர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்:  நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடந்த சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். நாகை அடுத்த நாகூர் ஷாஹூல்  ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா 459 வது ஆண்டு கந்தூரி விழா,  கடந்த 10 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன்  துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சந்தனக்கூடு ஊர்வலம், நாகை, அபிராமியம்மன் திருவாசலில் இருந்து புறப்பட்டது. சாம்பிராணி சட்டி,நகரா மேடை உட்பட 25 க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள் சந்தனக்கூட்டின் முன்னும் பின்னும் ஊர்வலமாக சென்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று அதிகாலை நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம்,முக்கிய வீதிகளில் வலம் வந்து, காலை 4.30  மணிக்கு தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின்  சந்தனக்கூடு ரதத்தில் இருந்து சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள் தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப்,துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. சந்தனம் பூசும் வைபவத்தில் பல மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்ரீகர்கள்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !