உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு பால், தயிர், மஞ்சள், நெய், சந்தனம், தேன் என, 16 வகையான அபி?ஷகங்கள் செய்யப்பட்டது. மாலை, 5 மணியளவில், சொர்ணபுரீஸ்வரர், நந்தி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில், ஆத்தூர், தலைவாசல், சேலம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், நாவக்குறிச்சி, வீரகனூர் உள்ளிட்ட கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !