திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
ADDED :3481 days ago
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோயிலில் பங்குனி விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த வாரம் வாஸ்து சாந்தியுடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. சுவாமி தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு திருக் கல்யாணம் நடந்தது விழா முடிவில் சுவாமி யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் வலம் வந்தார். திருக் கல்யாணத்தில் திருச்சுழி சுற்று கிராம பகுதி மக்கள் பங்கேற்றனர். நேற்று காலை தேரோட்டம் நடந்தது. வீதிகள் வழியாக வந்து கோயிலை சென்றடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.