மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கும்ப படையல் உற்சவம்
ADDED :3456 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கும்ப படையல் நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், மாசி திருவிழா கடந்த 7ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அமாவசையன்று மயான கொள்ளையும், 11ம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது. திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 13ம் தேதி நடந்தது. தொடர்ந்து 16ம் தேதி தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவின் நிறைவாக 19ம் தேதி இரவு கும்ப படையல் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு சாமி வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் நாகபூஷணி, அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.