உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு:14ல் விஷூ கனி தரிசனம்!

சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு:14ல் விஷூ கனி தரிசனம்!

சபரிமலைல: சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை (10ம் தேதி) மாலை திறக்கிறது. 14ம் தேதி விஷூ கனி தரிசனம் நடக்கிறது.சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷூ சிறப்பு பூஜைகளுக்காக நாளை மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறக்கிறார். நாளை வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 11-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.14- அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் விஷூ கனி தரிசனம் நடைபெறும். கனிகளும், காய்களும் ஐயப்பன் விக்ரகம் முன் குவித்து வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவர். பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 18-ல் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.மண்டல -மகரவிளக்கு காலத்துக்கு அடுத்த படியாக பக்தர்கள் அதிகமாக வரும் சீசன் என்பதால் அவர்களுக்கான வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலையில் பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் தேவசம்போர்டு சார்பில் ஆங்காங்கே பில்டர் செய்யப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு நடை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !