திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா துவக்கம்
ADDED :3546 days ago
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த விழா சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகம் தீர்மானித்தது. இந்த விழாவினை யொட்டி சம்பந்த விநாயகர் சன்னதி முன் முகூர்த்தம் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடத்தினர். இந்த பூஜையில் கோயில் அலுவலர்களும், சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டனர்.