உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை!

வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை!

செஞ்சி: செஞ்சிக் கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் இரண்டாவது ஆண்டாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி, பூ தேவி சமேத வெங்கட்ரமணருக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு, ஆயிரம் பெண்கள் பங்ேகற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை ஸ்ரீரங்க பூபதி கல்வி குழும தலைவர் பூபதி, தொழிலதிபர் கோபிநாத் ஆகியோர் பூஜையை துவங்கி வைத்தனர். செஞ்சி தாலுகாவை சேர்ந்த பஜனை குழுவினரின், சிறப்பு பஜனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாத விநியோகமும் செய்தனர். வழக்கறிஞர் வைகை தமிழ்ச்செல்வன், ஸ்ரீரங்க பூபதி கல்வி குழும இயக்குனர் சாந்தி பூபதி, நித்யானந்தம், வழக்கறிஞர் ராஜாராம், அரங்க முனியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !