பந்தலுார் கோவில் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3564 days ago
பந்தலுார் : பந்தலுார் அருகே காட்டிக்குன்னா பகுதியில், நடந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே உப்பட்டி காட்டிக்குன்னா பகுதியில், கூத்தாண்டவர் கோவில் ஆண்டு திருவிழா நடந்தது. கடந்த, 6ல் துவங்கிய திருவிழாவில், பல்வேறு பூஜைகளுடன், கொடியேற்றப்பட்டது. 8ல் கூத்தாண்டவர் சாமியின் கண் திறப்பு பூஜையும், கிடா பலி பூஜையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. விழாவில், கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.