தவம் என்றால் என்ன?
ADDED :5246 days ago
தவம் என்றால் உடனே யாரும் அஞ்சி விடக்கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே நிற்பதும் தவம் என்று கருதி விடக்கூடாது. அவையாவும் தவத்திற்கு அங்கங்களே அன்றி தவமாகாது. தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்சமாதானத்துடன் தாங்கிகொள்ளுதல், இன்னொரு உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரு பண்புகளும் சேர்ந்குணமே தவமாகும்.