உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடியினால் நோயா? இரக்கமே படாதீர்கள்!

குடியினால் நோயா? இரக்கமே படாதீர்கள்!

நோயாளிகளை அவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நலம் விசாரிக்கச் சொல்லும் நபிகள் நாயகம், ஒரே ஒரு வகை நோயாளிகளை மட்டும் பார்க்கவே  செல்லக்கூடாது என்கிறார்.அது, “மது அருந்துபவர்கள் நோயுற்றால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்,” என்பதாகும். ஆம்... குடியை நபிகள் நாயகம் கடுமையாக எதிர்க்கிறார். எதேச்சையாக வரும் நோயால் பாதிக்கப்படுபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்களை நலம் விசாரிப்பதன் மூலம் அவர்கள் ஆறுதல் அடைவர். ஆனால், குடிகாரன் தனக்கு நோய் வருமென தெரிந்தே தவறு செய்கிறான். தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பே கிடையாது. நோய் வரும் என்று தெரிந்தும் ஒரு பானத்தை அருந்துபவனின் முகத்தில் கூட விழிக்கக்கூடாது என்பதே இஸ்லாம் காட்டும் தத்துவம். இனிமேல் குடித்து விட்டு வாகனங்களை இயக்கி காயமடைபவர்கள், குடி காரணமாக இருதய நோய் உள்ளிட்ட பிற நோய்களால் மருத்துவமனைகளில் பார்க்கக் கூட போகாதீர்கள். அவர்கள் மீது சற்று கூட கருணை வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !