வல்லம் கோவிலில் கும்பாபிஷேகம்
செஞ்சி: வல்லம் மகாலிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா வல்லம் வேகப்பிள்ளை ஏரிக்கரையில் உள்ள ஆனந்த வல்லி அம்மை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்து, 19ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு கோ பூஜை மற்றும் கணபதி வேள்வியும், மாலை 5 மணிக்கு நிலபதி வேள்வி, மண்ணெடுத்து பூசித்தல், தெய்வ சிலைகள் கரிக்கோலம் வருதல், காப்பு அணிவித்தலும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு முதற்கால வேள்வியும், இரவு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜையும், 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9.30 மணிக்கு வேள்வி நிறைவும், 10 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் நடந்தது. காலை 10:30 மணிக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது.