உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி மாரியம்மன் வீதியுலா நடந்தது.  காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி மல்லிகேஸ்வரி மாரியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 9ம் தேதி மாரியம்மன் மற்றும்  கடந்த 10ம் தேதி பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் கஞ்சி வார்த்தல் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில்,  மாரியம்மன் முக்கிய பகுதிகளில் வீதியுலா நடந்தது. நேற்று மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளை  கிராமவாசிகள், நடுத்தர தொழிலாளர்கள் சங்கம், அனைத்து நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !