பாலுார் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :3435 days ago
நடுவீரப்பட்டு: பாலுார் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீ மிதி திருவிழா நடக்கிறது. கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 23ம் தேதி பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை அழைத்து வருதல் நடந்தது. 24ம் தேதி பக்காசூரனுக்கு அன்னம் வழ ங்குதல் மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. 25ம் தேதி திரவுபதி அம்மனுக்கும் அர்ச்சுனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நாளை (27ம் ÷ ததி) காலை விநாயகர், திரவுபதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்; மாலை 5:00 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. அதனையடுத்து 28ம் தேதி தருமர் பட்டாபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.